Wednesday 30 March 2016

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. இன்று பைரவருக்கு உகந்த தேய்பிறை அஷ்டமித் திதியாகும் .. மாலைவேளையில் சிவாலயம் சென்று பைரவரைத் தரிசிப்பது சாலச்சிறந்தது ..தங்களனைவருக்கும் தொழில் விருத்தி .. உத்தியோகத்தில் பதவி உயர்வு .. கடன்சுமை குறையவும் இல்லத்தில் மகிழ்ச்சியும் .. சுபீட்சமும் நிலவிடவும் பைரவரைப் பிரார்த்திக்கின்றேன் .. 





ஓம் ஷ்வானத்வஜாய வித்மஹே !
சூலஹஸ்தாய தீமஹி !
தந்நோ பைரவஹ் ப்ரசோதயாத் !!

பைரவர் என்றாலே பயத்தை போக்குபவர் .. அடியார்களின்
பாபத்தையும் நீக்குபவர் என்று பொருள் .. அவருக்குத் தகுந்த
பூஜைகள் செய்தால் மட்டுமே நம்மை காப்பார் என்றில்லை ..
எந்தவித பூஜைகள் செய்யாவிட்டாலும் கூட இக்கட்டான நேரத்தில் முழுமனதுடன் அவரை நினைத்தாலே போதும்
சந்தோஷத்துடன் உடனே செயல்பட்டு நம்மை ஆபத்துகளில் இருந்து காப்பாற்றுவார் ..

துன்பங்களும் .. துயரங்களும் வாழ்க்கையில் தொடர்கதையாகிப் போனால் வாழ்க்கை என்பதை வாழப்பிடிக்காமல் அதனைத் தீர்த்துவிடத்தான் மனம் ஏங்கும் .. அப்படி சோகத்தின் விளிம்பில் இருப்பவர்களுக்கு
ஆறுதல் கூறி அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் அமுதமொழியாக பைரவர் வழிபாடு கூறப்படுகிறது ..
கடவுள்வழிபாடு செய்துவிட்டு அதற்காக பலன்களை எதிர்பார்க்கும் பக்தர்களுக்கு உடனடி நிவாரணம் தரும் கடவுளாக பைரவர் விளங்குகின்றார் ..

இத்தகைய சிறப்புவாய்ந்த அஷ்டமித் திதியில் நாமும் பைரவரைப் போற்றுவோம் ! எல்லா நலமும் பெறுவோமாக!
ஓம் பைரவாய நமஹ ! வாழ்க வளமுடனும் ! என்றும் நலமுடனும் !