Wednesday, 27 May 2015

இறைவனின் வாசனை எப்படி இருக்கும்


    எவருடய உள்ளத்திலும் வந்து அமருவான் இறைவன்.
    இவன் தன்மை யாதெனில், இவனுக்கு எதுவும் சொந்தமில்லை, யார் தம்மை அழைத்தாலும்... பாரபட்சமின்றி வந்தமருவான்.
    ஏழை பணக்காரன் எல்லாம் இவனுக்கு ஒன்றுதான், .
    எதுவும் இவனுக்கு பெரிய விஷயமில்லை.
    யாவரும் தம் பிள்ளைகளே எந்த ஒரு விருப்பு, வெறுப்பும் கிடையாது.
    இவன் வந்தால், என்னே ஒரு மகிழ்ச்சிகொள்கிறது இந்த மனம்.
    இவனை பற்றி அறிய முற்படும்போதே ஒரு அமைதி சூழ்ந்து கொள்கிறது.
    எங்கோ மழை அடித்தால் இங்கே வரும் குளிர்காற்று போல, இவன் நறுமணம்,
    இவன் தன்மையை, இவனை அறிய முற்படும்போதே, மனம் மெல்ல மெல்ல உணர ஆரம்பிக்கிறது.
    எந்த ஒரு நிகழ்வையும் இவன் நேர்படுத்துவான்,
    எந்த ஒரு இடரையும் சரிசெய்வான்.
    எப்படிப்பட்ட மனதையும் அது எப்படிப்பட்ட தன்மையாயினும் அதனை நொடிபொழுதில் சரி செய்துவிடுவான்.
    இவன் அற்புதம் உள்ளே நன்றாக ஆழ்ந்து உள்வாங்க உள்வாங்க, கல்நெஞ்சமும் கரைந்து, நெகிழ்ந்துவிடும்.
    இவன் இருக்கும் இடத்தை சுற்றி எங்கெங்கும் அன்பின் அலைகள் கரைபுரண்டோடும், மெல்லிய அமைதி உறைந்துகிடக்கும்.
    யாரெல்லாம் இந்த அலைவட்டத்திற்குள் தம்மை இணைத்துக்கொள்கிறார்களோ
    அவர்களுக்கெல்லாம் அள்ள அள்ள குறையாத அன்பின் அலைகளும், தெவிட்டாத ஆனந்தமும்,
    அமைதியும், தெளிவும் கிடைக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை 

அன்னை காஞ்சி காமாட்சி போற்றிகள் (KANCHI KAMATCHI AMMAN)





காமாக்ஷி அம்பாள் போற்றி!

ஓம் ஸ்ரீ காஞ்சி நகர்வாழ் கன்னிகை போற்றி
ஓம் காமகோடி பீடபத்மத் துறைந்தனை போற்றி
ஓம் கைலாஸ வாஸிநீ ஸ்ரீகாமாக்ஷீ போற்றி
ஓம் காருண்ய ரூபிணீ ஸ்ரீகாயத்ரீ போற்றி
ஓம் ஸ்ரீகாமபீடந்தனில் ஒளிர்ந்தனை போற்றி
ஓம் ஸ்ரீகாயத்ரீ மந்திரத் திருந்தனை போற்றி
ஓம் காருண்ய கிருபா கடாக்ஷிணீ போற்றி
ஓம் காயத்ரீ மண்டபத்து அமர்ந்தனை போற்றி
ஓம் ஸ்ரீகாமகோடி காமாக்ஷி காயத்ரீ போற்றி
ஓம் மாவடியின் கீழமர்ந்த மங்கையே போற்றி
ஓம் ஸ்ரீகாமாக்ஷி முக்கண்ணி ஸ்ரீதேவி போற்றி
ஓம் ஸ்ரீகாயத்ரீ ஸாவித்ரீ ஸரஸ்வதீ போற்றி
ஓம் கரும்பு வில் கைக்கொண்ட கன்யகை போற்றி
ஓம் கருணை பொழியும் கண்ணுடையினை போற்றி
ஓம் நவரத்ன சிம்மபீடத் தமர்ந்தனை போற்றி
ஓம் ரக்த பத்மாசனத் திருந்தனை போற்றி
ஓம் கோடி காமமருளும் காமகோடி போற்றி
ஓம் பகழி பாச அங்குசமும் கொண்டனை போற்றி
ஓம் வாணியாய் வந்தருள் வாமாக்ஷி போற்றி
ஓம் ஸ்ரீகாமேசுவர ப்ரிய காமேசுவரீ போற்றி
ஓம் ஓம் கடவூருறையும் கமலை போற்றி
ஓம் அருளது நல்கும் அம்பிகை போற்றி
ஓம் குலமலையரசன் கொடியே போற்றி
ஓம் ஸர்வ ஸங்கீத ரஸிகையே போற்றி
ஓம் பரசிவனிடத் தொளிர் விளக்கே ! போற்றி
ஓம் அவனியின் படைப்பின் ஆதியே ! போற்றி
ஓம் பிந்துஸ்தானத்தொளிர் நன்மணியே! போற்றி
ஓம் ஆதி அந்தமிலாதொரு அன்னையே! போற்றி
ஓம் இன்பம் நல்கிடும் ஈசுவரீ போற்றி
ஓம் சங்க்க சக்ர கதா தாரிணீ போற்றி
ஓம் பரிசு சூல பினாக தாரிணீ போற்றி
ஓம் பூர்ணிமை சந்திர நிவாஸிநீ போற்றி
ஓம் பூரண கிருபா கடாக்ஷிணீ போற்றி
ஓம் பூர்ணிமை வாஸிநீ பூர்ணீ போற்றி
ஓம் புவனம் ஆளும் புவநேசுவரீ போற்றி
ஓம் சதகோடி மன்மத சுந்தரீ போற்றி
ஓம் ஓங்கார ரூபத்துள் விளங்கினை போற்றி
ஓம் கருணையருளும் கண்மணி போற்றி
ஓம் அட்டமூர்த்தங்கள் தொழும் அன்னையே போற்றி
ஓம் ஞானியர் மனக்குகை அடைந்தனை போற்றி
ஓம் திருமால் இதயம் சேர்ந்தனை போற்றி
ஓம் ஸ்ரீசக்கர நடுவண் ஒளிர்ந்தனை போற்றி
ஓம் மல்லிகை மலரொத்த புன்முறுவலோய் போற்றி
ஓம் பஞ்சாக்ஷர பீடத்து விளங்கினை போற்றி
ஓம் இதழாயிர பத்மத்து அமர்ந்தனை போற்றி
ஓம் நவரத்னமணி த்வீபத் தொளிர்ந்தனை போற்றி
ஓம் திருக்கையில் சூலம் கொண்டனை போற்றி
ஓம் பக்த ப்ரிய பரமேசுவரீ போற்றி
ஓம் விந்தியாசல நிவாஸிநீ பார்வதீ போற்றி
ஓம் அருள்புரி அன்னை ஆனந்தீ போற்றி
ஓம் அட்ட சித்தியருள் காமாக்ஷீ போற்றி
ஓம் மனக்குகையினில் உறை மாதங்கீ போற்றி
ஓம் இதயக் கோயிலிலொளிர் விளக்கே போற்றி
ஓம் உவமையிலாத்தாள் உடையினை போற்றி
ஓம் ஸத் சித் ஆனந்த வடிவே போற்றி
ஓம் பஞ்ச பூத காரணீ பஞ்சாக்ஷரீ போற்றி
ஓம் எண்ணிய எண்ணியாங்கு அருள்வோய் போற்றி
ஓம் ஸர்வ மங்கள சக்தி சுமங்கலை போற்றி
ஓம் கௌரீ காமாக்ஷீ காயத்ரீ போற்றி
ஓம் ஸ்ரீதுர்கா லக்ஷ்மீ ஸ்ரீஸரஸ்வதீ போற்றி
ஓம் வீரீ அமரீ வேதாளி போற்றி
ஓம் நவமணி கிரீடமும் பூண்டனை போற்றி
ஓம் நலம் நல்கிடும் நாயகீ போற்றி
ஓம் பயம் ஒழிக்கும் பாலையே போற்றி
ஓம் முக்கண்ணுடையோய் முக்கண்ணீ போற்றி
ஓம் நிரந்தரி சுதந்தரீ துரந்தரி போற்றி
ஓம் ரூப ரஸ கந்த ரூபேசுவரீ போற்றி
ஓம் பிரம்ம விஷ்ணு சிவ ஆதீசுவரீ போற்றி
ஓம் பிராஹ்மீ மகேசுவரீ கௌமாரீ போற்றி
ஓம் வைஷ்ணவீ வாராஹீ வாமாக்ஷீ போற்றி
ஓம் இந்த்ராணீ ஸ்ரீ சாமுண்டா சிவதூதீ போற்றி
ஓம் தேவீ பரமேசுவரீ ஸ்ரீலலிதையே போற்றி
ஓம் வரமது அருளிடும் வாராஹீ போற்றி
ஓம் மாசற்ற அன்னையே அம்பிகை போற்றி
ஓம் ஸர்வ பாப விநாசனீ போற்றி
ஓம் ஸர்வ துஷ்ட ஸம்ஹரிணீ போற்றி
ஓம் பத்மாசனத் தமர்ந் தருள் புரிந்தனை போற்றி
ஓம் ஸ்ரீகாமேசுவர வாமாக்ஷீ ஸ்ரீகாமாக்ஷி போற்றி
ஓம் ஸர்வேசுவரீ ஸர்வ ரூபிணீ போற்றி
ஓம் ஸர்வா லங்காரப்ரிய ஸ்ரீஸரஸ்வதீ போற்றி
ஓம் மதுகைடப மஹிஷாசுர மர்த்தனீ போற்றி
ஓம் சும்ப நிசும்ப ஸம்ஹார சுந்தரீ போற்றி
ஓம் சண்ட முண்ட ஸம்ஹார சாமுண்டீ போற்றி
ஓம் சரத்காலத் தொளிர் நிலவொளி போற்றி
ஓம் அமரர்கள் போற்றும் அமலை போற்றி
ஓம் விண்ணவர் விரும்பும் விமலை போற்றி
ஓம் மண்ணவர் மகிழும் சுமங்களை போற்றி
ஓம் பார்வதீ உமா மகேசுவரீ போற்றி
ஓம் அன்பர்கள் மனத்தமர் அன்னமே போற்றி
ஓம் அகிலம் ஈன்றதோர் அம்மையே! போற்றி
ஓம் பூவுலக சிருஷ்டிக் காரணீ போற்றி
ஓம் இரத்தின மாலை பூண்டனை போற்றி
ஓம் பக்தர்கள் பற்றும் பற்றே போற்றி
ஓம் இதய வனத்தில்வரு குயில் போற்றி
ஓம் இதயம் குளிர அருள்வோய் போற்றி
ஓம் அறுபத்து நான்காயிரப் பீடரசே!! போற்றி
ஓம் அக்ஷர ரூபிணீ அம்பிகை போற்றி
ஓம் வானவர் வாழ்த்தும் வடிவே போற்றி
ஓம் உலகோர் வாழ்த்தும் உமையே போற்றி
ஓம் சந்திர மண்டல கமலத் தொழுகுதேன் போற்றி
ஓம் சந்திர நிவாஸினீ சாந்தினி போற்றி
ஓம் பஞ்சதசாக்ஷரீ ஸ்ரீபார்வதீ போற்றி
ஓம் தேகதேவாலயத் துறைந்தனை போற்றி
ஓம் தேன் பெருகும் மலரடைந்தனை போற்றி
ஓம் ஸரஸ்வதீ லெக்ஷ்மீ கிங்கரீ போற்றி
ஓம் பஞ்சப்ரேதரசனத் தமர்ந்தனை போற்றி
ஓம் பரமானந்த சிவ பார்வதீ போற்றி
ஓம் பார்வதி சங்கரீ சக்தியே போற்றி
ஓம் சிவை முக்கண்ணி ஸ்ரீதேவீ போற்றி
ஓம் மாணிக்கக் கடகம் பூண்டனை போற்றி
ஓம் சோடசாக்ஷரீ மாமந்திரத் திருந்தனை போற்றி
ஓம் யௌவன மாங்கல்ய சுமங்கலை போற்றி
ஓம் ஸர்வலோக பயங்கரீ சிவையே போற்றி
ஓம் பிரகாச பீடத்து அமர்ந்தனை போற்றி
ஓம் சந்திரசூடாமணி கிரீடம் பூண்டனை போற்றி
ஓம் ஸ்ரீமேருசுக்கரத் துறைந்தனை போற்றி
ஓம் சரண கமலம் கொண்ட கமலை போற்றி
ஓம் கசல கலா ரூபிணீ ஸ்ரீமாத்ருகா போற்றி
ஓம் பிரபஞ்ச ரூபிணீ ஸ்ரீகாயத்ரீ போற்றி
ஓம் பாலை யுவதி விருத்தையே போற்றி
ஓம் பக்தானுக்ரஹ ஸ்ரீபராசக்தியே போற்றி
ஓம் திரிபுரமெரித்த திருபுராந்தகீ போற்றி
ஓம் பரசிவமிடப் பாகம் கொண்டனை போற்றி
ஓம் காலனைக் கொன்ற காளிகை போற்றி
ஓம் திருக்கையில் வெற்றிவேல் கொண்டனை போற்றி
ஓம் சுந்தர வெள்ளச் சுதந்தரீ போற்றி
ஓம் ஸ்ரீகாளீ கராளி துர்க்கை போற்றி
ஓம் நீலோத்பல மலர் தரித்தனை போற்றி
ஓம் நீடூழி ஆளும் நிலமகள் போற்றி
ஓம் திருஆலங்காடு சிவத்தை எதிர்த்தனை போற்றி
ஓம் அமிழ்த மயமான அன்னையே போற்றி
ஓம் சிம்ம வாஹனம் கொண்ட சிவையே போற்றி
ஓம் பிறையினைச் சிரமேற் கொண்டனை போற்றி
ஓம் பிறங்கு மோக்ஷõமிர்தப் பெருக்கே! போற்றி
ஓம் பிரம்மம் போற்றும் பிராஹ்மீ போற்றி
ஓம் சிவமுடனிருக்கும் செல்வியே போற்றி
ஓம் முப்பத்து முக்கோடியின் முதலாதியே போற்றி
ஓம் இதய வானத்து நிலவொளி போற்றி
ஓம் கதம்ப வனத்தமர் கலியாணீ போற்றி
ஓம் பயங்கர உருக்கொண்ட ஸ்ரீதுர்க்கை போற்றி
ஓம் கவிகள் கருத்தினிற் கலந்தனை போற்றி
ஓம் கருணா நிதியே ஸ்ரீ காயத்ரீ போற்றி
ஓம் கஷ்ட நிவாரணக் காரணீ போற்றி
ஓம் வேத விருக்ஷத்தினி லொளிர்ந்தனை போற்றி
ஓம் உபநிடத மலரின் மணமே போற்றி
ஓம் ஞானக் கனியின் சுவையே போற்றி
ஓம் மோக்ஷ ஸாம்ராஜ்யத் தனி அரசியே போற்றி
ஓம் பல்லோர் புகழும் பரிமளை போற்றி
ஓம் பூமத்திய ஸ்தானமும் அடைந்தனை போற்றி
ஓம் ஆகாய பீட ந்தனிலு மமர்ந்தனை போற்றி
ஓம் ஸ்ரீ காமகோடி ஆதி பீடக் காரணி போற்றி
ஓம் காமனையும் வென்ற கடாக்ஷணி போற்றி
ஓம் ஸ்ரீசக்கர நிவாஸநீ ஸ்ரீ காமாக்ஷி போற்றி
ஓம் உலகெலா முணர்ந் தோதுவோய் போற்றி
ஓம் உவமை சொலா உரு வுடையினை போற்றி
ஓம் பிரம்மானந்த வல்லி பிராம்மணீ போற்றி
ஓம் வீணாவாத்ய ப்ரிய பரமேசுவரீ போற்றி
ஓம் ஸ்ரீஅகில அண்டேசுவரீ அம்மையே! போற்றி
ஓம் வெள்ளயங் கிரிதனி லமர்ந்தனை போற்றி
ஓம் பரசிவ மனத்தைக் கவர்ந்தனை போற்றி
ஓம் ஸ்ரீகைலாச நாதனுட னுறைந்தனை போற்றி
ஓம் பக்தர்க் கருள்புரி பகவதீ போற்றி
ஓம் பூர்ண சந்திரமுக முடையினை போற்றி
ஓம் பார்தனி லொளிரும் பார்வதீ போற்றி
ஓம் வடமொழி எழுத்தின் வடிவினை போற்றி
ஓம் முக்கண்ணுடைய மூகாம்பிகை போற்றி
ஓம் இறந்ததோர் சிசுவை எழுப்பினை போற்றி
ஓம் வேதாகம வனத்துறை வேதாந்தி போற்றி
ஓம் அருமைச் செல்வியே ஆனந்தி போற்றி
ஓம் மண்டலம் மகிழும் மகேசுவரீ போற்றி
ஓம் புண்ணிய ரூபிணீ புவநேசுவரீ போற்றி
ஓம் புஷ்ப விமானந்தனி லமர்ந்தனை போற்றி
ஓம் பராசக்தி பீடத் தொளிர்ந்தனை போற்றி
ஓம் மனக்கண் முன் ஒளிர் நன் மதியே போற்றி
ஓம் மாயைத் திரையினை விலக்கினை போற்றி
ஓம் ஆசையை அகற்றிடும் அன்னையே போற்றி
ஓம் அன்பை அருளும் அம்பிகை போற்றி
ஓம் ஸ்ரீசண்டிகே என் இதயத் தமர்வோய் போற்றி
ஓம் விண்மீன் நடுவண் விளங்கினை போற்றி
ஓம் விருத்தையே உமையே விமலையே போற்றி
ஓம் அறியாமை அகற்றும் அன்னை போற்றி
ஓம் ஞானக் கனி நல்கும் நாயகீ போற்றி
ஓம் ஞானவானத் தொளிர் நன்மதியே போற்றி
ஓம் அத்வைத ரூபிணீ அம்பிகை போற்றி
ஓம் ஸ்ரீசந்த்ர சேகரகுரு சங்கரீ போற்றி
ஓம் ஸ்ரீசந்த்ர மௌளீசுவர சக்தியே போற்றி
ஓம் என் இதயத் தமர்ந்த ஈசுவரீ போற்றி
ஓம் ஆனந்தம் அருளும் அம்பிகை போற்றி
ஓம் அருள்மழை பொழியு மகிலேசுவரீ போற்றி
ஓம் தாமரை நடுவண் தங்கினை போற்றி
ஓம் நந்தவன நடுவளர் நாயகீ போற்றி
ஓம் நாற்கரம் கொண்ட நவ துர்க்கை போற்றி
ஓம் பிரம்மசாரிணீ பிராஹ்மீ போற்றி
ஓம் அம்பிகை ரூபிணீ அபிராமீ போற்றி
ஓம் ஆட்கொண் டருளும் ஸ்ரீதேவீ போற்றி
ஓம் வருவோய் அமர்ந்தருள் புரிவோய் போற்றி
ஓம் அறுபத்து நாற் கலைகளினரும்பே போற்றி
ஓம் அறியாமை யகற்றுமுறு வாயினை போற்றி
ஓம் உபநிடத கமலத்தினி லோங்காரி! போற்றி
ஓம் பார்வதீ ஸ்ரீசக்ர லலிதேசுவரி! போற்றி
ஓம் மின்னற் கொடிபோல் விளங்கினை போற்றி
ஓம் அஷ்ட ஐசுவரியப் பிரதானிகை போற்றி
ஓம் வானவர் வாழ்த்தும் வாமாக்ஷீ போற்றி
ஓம் முனிவர்க் கருள்புரி மூகேசுவரீ போற்றி
ஓம் பூவுலகம் புகழ் பூதேசுவரீ போற்றி
ஓம் அகிலம் யாவுமாளும் அகிலேசுவரீ போற்றி
ஓம் குயிலினுமினிய குரலுடையினை போற்றி
ஓம் மலையரசன் மனம் மகிழ் மங்கை போற்றி
ஓம் மகிழ்வுடன் அருள்செயும் மாதா போற்றி
ஓம் நவரத்னபொன் ரதந்தனி லமர்ந்தனை போற்றி
ஓம் பிரகாச பீடத்திருந் தாண்டனை போற்றி
ஓம் துக்கம் துடைத்தருள் துர்க்கை போற்றி
ஓம் கஷ்டம் களைந்தருள் காயத்ரீ போற்றி
ஓம் நன்மை நல்கிடும் நாயகீ போற்றி
ஓம் பயம் போக்கிடும் பவாநீ போற்றி
ஓம் காக்ஷி கொடுத்தருள் காமாக்ஷீ போற்றி
ஓம் திருமகள் வணங்கிடும் தேவியே போற்றி
ஓம் பக்தர் பற்றுமோர் பரமேசீ போற்றி
ஓம் திருக்கயிலைமலை நடுவண் திகழ்ந்தனை போற்றி
ஓம் சிதக்னி குண்டத் தொளிர் தேவேசீ போற்றி
ஓம் புன்னகை புரியும் பூங்கொடி போற்றி
ஓம் மார்பினிற் பதக்கம் பூண்டனை போற்றி
ஓம் வேத ரூபிணீ வேதேசுவரீ போற்றி
ஓம் என் தாமரை இதயத் தமர்ந்தனை போற்றி
ஓம் சிருஷ்டியாதி காரணி பரசிவையே போற்றி
ஓம் கஸ்தூரி திலகக் காமாக்ஷீ போற்றி
ஓம் பரிமள ரூபிணீ பரிமளை போற்றி
ஓம் பில்வ தளந்தனி லடங்கினை போற்றி
ஓம் அறிவுக் கடலின் அருமணி போற்றி
ஓம் சிவே சரண்யே ஸ்ரீசாரதை போற்றி
ஓம் துஷ்ட விநாசக் காரணீ போற்றி
ஓம் மாயை உலகின் நன்மதியே! போற்றி
ஓம் மதியினை யிகழ் முக முடையினை போற்றி
ஓம் கன்னிகை ஸ்ரீசிவபரமேசீ போற்றி
ஓம் கயிலைச் சிவமுடன் கலந்தனை போற்றி
ஓம் மனவானத் தொளிர் நன்மதியே போற்றி
ஓம் அரும்பொன் மாலை யணிந்தனை போற்றி
ஓம் பிலாகாச ரூபிணி ஸ்ரீகாமாக்ஷி போற்றி
ஓம் காஞ்சீ ஆவரணத் தடங்கினை போற்றி
ஓம் காமகோடி சக்கரத் தொளிர்ந்தனை போற்றி
ஓம் காமகோடியாதிபீடக் காம கன்யகை போற்றி
ஓம் பதிரியில் ஜோதிப் பார்வதீ போற்றி
ஓம் துவாரகைக் காளீ துர்க்கை போற்றி
ஓம் ஜகந்நாதத் தொளிர் விமலை போற்றி
ஓம் சிருங்க கிரியினிலமர் சாரதே போற்றி
ஓம் கருத்தினி லடங்காக் காமேசுவரீ போற்றி
ஓம் உலக உண்மையின் உருவே போற்றி
ஓம் வடிவழகமைந்தோர் வாமேசுவரீ போற்றி
ஓம் தேவர்கள் தொழும் தேவேசுவரீ போற்றி
ஓம் இளந்தளிர் விரலுடை இமையே போற்றி
ஓம் சகல சௌபாக்கிய ஆதிகாரணீ போற்றி
ஓம் அகில மா மந்திரத் தடங்கினை போற்றி
ஓம் அன்பர்கள் நாடும் அபிராமி போற்றி
ஓம் சகல கலாவல்லி ஸ்ரீ காமாக்ஷி போற்றி
ஓம் தாமரை மலர்க்கரம் கொண்டனை போற்றி
ஓம் தாரகன் மார்பினைத் தகர்த்தனை போற்றி
ஓம் நான்மறையின் நடு நாயகம் போற்றி
ஓம் அஷ்டலெக்ஷிமியாளும் அரசாயினை போற்றி
ஓம் கோவை நிறமுடைக் கோமதி போற்றி
ஓம் பிறவியகற்றும் பிரம்ம மாயினை போற்றி
ஓம் வெண் தாமரையிலமர் வேதநாயகி போற்றி
ஓம் தென்முகனிடத்தினி லொளிர்ந்தனை போற்றி
ஓம் பீஜாட்சரத் தொளிர் பீஜாக்ஷரீ போற்றி
ஓம் சாவித்ரீ ஸர்வ மங்களை போற்றி
ஓம் சாந்தியி னிருப்பிடச் சங்கரீ போற்றி
ஓம் சண்டிகை ரூபிணீ ஸ்ரீசாமுண்டி போற்றி
ஓம் தாண்டவப்ரிய தாக்ஷõயணீ போற்றி
ஓம் மகேசன் மனம் மகிழ் மங்களை போற்றி
ஓம் சிவபாதியுடம்பினிற் பதிந்தனை போற்றி
ஓம் மல்லிகை முல்லையின் மணமே போற்றி
ஓம் தும்பை மலரின் தூய்மையே போற்றி
ஓம் தேனினுமினிய மொழியினை போற்றி
ஓம் தேவர்கள் தேடும் தேவேசுவரீ போற்றி
ஓம் அன்னத்தின் அருங்குண அம்மையே போற்றி
ஓம் மின்னலை யிகழ் முக முடையினை போற்றி
ஓம் கொண்டையிற் கொன்றை கொண்டனை போற்றி
ஓம் ஒட்டியாண பீடந்தனி லொளிர்ந்தனை போற்றி
ஓம் காமகோடி பீடத் தமர்ந்தரசியே போற்றி
ஓம் ஏகாம்பரனிடத் தொளிர் ஏகேசுவரீ போற்றி
ஓம் காமேசுவரீ கமலே ஸ்ரீகாமாக்ஷீ போற்றி
ஓம் மூலகாமாக்ஷியின் ஆதிமூலமே போற்றி
ஓம் தவம்புரியும் தவக் காமாக்ஷீ போற்றி
ஓம் குகையினிற் குலாவும் குமரியே போற்றி
ஓம் யந்திரத்தினி லமர் யதீசுவரீ போற்றி
ஓம் வெளிதனிலொளிரும் வேதாளி போற்றி
ஓம் காயத்ரீ மண்டபக் காமகோடி போற்றி
ஓம் தீபப்பிரகாசத் தொளிர்ந்தனை போற்றி
ஓம் சிந்தையடக் கருள்புரி சிவகாமீ போற்றி
ஓம் மூவுலகத்தின் தோற்ற முதலாயினை போற்றி
ஓம் தருமத்தினுருவாயு மமர்ந்தனை போற்றி
ஓம் அகில சக்தியினாதி சக்தியே போற்றி
ஓம் தாமரைத் தடாகத்தினிலவொளி போற்றி
ஓம் பாற்கடல் நடுமவர் பார்வதீ போற்றி
ஓம் காமனின் விற்புருவ முடையினை போற்றி
ஓம் வண்டினை யிகழ்விழி யுடையினை போற்றி
ஓம் செந்தாமரை மலரடி யுடையினை போற்றி
ஓம் இருபத்து நான்கக்ஷரத் தடங்கினை போற்றி
ஓம் ஸ்ரீகச்சியின் நடுவமர் ஸ்ரீகாமாக்ஷி போற்றி
ஓம் திருக்கயிலையமர் மனமகிழ் கமலை போற்றி
ஓம் பார்வதீ பகவதீ பைரவ ஓங்காரீ போற்றி
ஓம் காஞ்சீ ரத்ன பீடத் தமர்வோய் போற்றி
ஓம் அறியா வனமெரி அக்னியே! போற்றி
ஓம் ஆதரித் தாண்டருள் அம்பிகை போற்றி
ஓம் தாயென வந்தருள்செய் காமாக்ஷி போற்றி
ஓம் தாமதம் செயாதருள் புரிவாய் போற்றி
ஓம் அடியேனை யாண்டருள் அம்மையே போற்றி
ஓம் மூகனுக்கருள் செய்த மூகாம்பிகை போற்றி
ஓம் செஞ்சுடர் உடலுடைச் செல்வமே போற்றி
ஓம் செங்கனி வாயுடைச் செல்வியே போற்றி
ஓம் குஞ்சிதச் சரணம் கொண்டனை போற்றி
ஓம் ரஞ்சித வடிவம் உடையினை போற்றி
ஓம் பஞ்ச புஷ்ப பாணமும் தரித்தனை போற்றி
ஓம் குங்கும ஆடையும் கொண்டனை போற்றி
ஓம் கருணை வெள்ளக் காமாக்ஷி போற்றி
ஓம் சஞ்சல உலகினில் சாந்தினி போற்றி
ஓம் தங்க நிறத்துடன் நின்றனை போற்றி
ஓம் யோகநிலை கொண்ட காமாக்ஷி போற்றி
ஓம் வினைகளகற்றிட வரும் தாய் போற்றி
ஓம் நினைப்பவர் உளத்துறை காமாக்ஷி போற்றி
ஓம் கலைமகள் வாழ்த்தும் காமாக்ஷி போற்றி
ஓம் சிந்தையடக் கருள்புரி சிவேசுவரீ போற்றி
ஓம் தாஸனுக் கருள்புரி தாக்ஷõயணீ போற்றி
ஓம் ஸெளபாக்கிய சுந்தரீ காமரூபி போற்றி
ஓம் மதுரை மீனாக்ஷியாயொளிர் காமாக்ஷி போற்றி
ஓம் காசி விசாலாக்ஷியாயமர் காமாக்ஷி போற்றி
ஓம் மயிலைக் கற்பக மஹேசுவரீ போற்றி
ஓம் காயத்ரீயாயொளிர் கமலே காமாக்ஷி போற்றி
ஓம் வேகமாய் வந்தருள்பொழி காமாக்ஷி போற்றி
ஓம் மங்களம் நல்கிடும் மங்களை போற்றி
ஓம் அஞ்சேல் கூறிட வருதாய் போற்றி
ஓம் இன்ப வீட்டினை யருள்வோய் போற்றி
ஓம் இதயத் தாமரையிலமர்ந் தருள்வோய் போற்றி
ஓம் இதயத் தடாகத்தினி லன்னமே போற்றி
ஓம் வீணையின் நாதத்தை வென்றனை போற்றி
ஓம் இருளை நீக்கி அருள்வாய் போற்றி
ஓம் சங்கரன் மனதினில் கலந்தனை போற்றி
ஓம் உமேசனுக்குகந்ததோர் உமையே போற்றி
ஓம் கச்சியின் நடுவதி லமர்ந்தனை போற்றி
ஓம் ஊமையை அகற்றிய உத்தமி போற்றி
ஓம் இளம்பிறை சூடிய இமையே போற்றி
ஓம் மேரு பிந்துவினி லமர்ந்தனை போற்றி
ஓம் கயிலைக் கண்மணி காமாக்ஷி போற்றி
ஓம் உளத்தினொளியினி லொளிர்ந்தனை போற்றி
ஓம் அறியா இருளினை யகற்றினை போற்றி
ஓம் சக்தி பீட அரசே ஸ்ரீராஜேசுவரீ போற்றி
ஓம் மணிமண்ட பந்தனி லமர்ந்தனை போற்றி
ஓம் பாபங்கள் அகற்றிடும் பவாநீ போற்றி
ஓம் ஞானப் பாலூட்ட வருதாய் போற்றி
ஓம் உலக அன்னையே உமையே போற்றி
ஓம் அருவா யொளிரும் அன்னை போற்றி
ஓம் எளியேனுக் கருள்புரி காமாக்ஷி போற்றி
ஓம் காமேசுவர வாமாக்ஷீ காமாக்ஷீ போற்றி
ஓம் ஜயதேவீ ஜயேசுவரீ காமாக்ஷீ போற்றி
ஓம் சர்வேசுவரீ ஜகந் மோகினி போற்றி
ஓம் கயிலைச் சபை நடுவண் அமர்ந்தனை போற்றி
ஓம் இந்திரன் புகழும் இந்த்ராக்ஷி போற்றி
ஓம் கன்யா குமாரிக் கன்யகை போற்றி
ஓம் பத்மாசனத் தமர் பார்வதி போற்றி
ஓம் பஞ்சப்ரேத ஆசனத்தமர் பஞ்சாக்ஷரீ போற்றி
ஓம் உலகினில் ஒளிரும் சுடரொளியே போற்றி
ஓம் ஒப்பிலா உருவாயு மொளிர்ந்தனை போற்றி
ஓம் மனதிற் கிசைந்ததோர் மங்களை போற்றி
ஓம் ஸ்ரீ சண்டிகை வுருவா யருள்வோய் போற்றி
ஓம் அன்னத்தின் மேலமர் அம்பிகை போற்றி
ஓம் பக்தர்கள் மனமுள் பனிமதி போற்றி
ஓம் தீப ஜோதியினி லொளிர்ந்தனை போற்றி
ஓம் உருவா யொளிரும் உமையே போற்றி
ஓம் திருவா யொளிர் திரு புரேசுவரீ போற்றி
ஓம் அமுதா யினிபதா யருள்தாய் போற்றி
ஓம் ஞானக் கனியினில் கலந்தனை போற்றி
ஓம் உதய மதியிடத் தொளிர்ந்தனை போற்றி
ஓம் பிறப்பிலா மருந்ததை அருள்தாய் போற்றி
ஓம் விரைவினில் வந்தருள் புரிவோய் போற்றி
ஓம் உமையே விமலை கமலை போற்றி
ஓம் சடை நாதனிடத் தொளிர் சங்கரீ போற்றி
ஓம் வேதார்த்தமாகிய வேதேசுவரீ போற்றி
ஓம் புராணார்த்தமாகிய புராந்தகீ போற்றி
ஓம் நாரணீ காரணீ பரிபூரணீ போற்றி
ஓம் காமேசனிடத் தொளிர் காமாக்ஷீ போற்றி
ஓம் பூரணமாகியதோர் ஜோதியே போற்றி
ஓம் வேத உண்மையின் வடிவாயினை போற்றி
ஓம் காளீ மகேசுவரீ காமாக்ஷீ போற்றி
ஓம் கருணையோ டருள்புரி காயத்ரீ போற்றி
ஓம் பரம்பொருளுருவா யமர்ந்தனை போற்றி
ஓம் சதாசிவனிடத் தமர் சங்கரீ போற்றி
ஓம் சரணமடைந்தேன் சாரதே போற்றி
ஓம் சாகா வரமருள் சாம்பவீ போற்றி
ஓம் அஞ்சேலென் றருள்புரி அபிராமி போற்றி
ஓம் ஸ்ரீசதாசிவ பரப்ரும் மேசுவரீ போற்றி
ஓம் கையினிற் கடகம் பூண்டனை போற்றி
ஓம் தேவாதி தேவ தேவேசுவரீ போற்றி
ஓம் மும்மூர்த்திகள் தொழும் மூகாம்பிகை போற்றி
ஓம் ஆனந்த முக்தியருள் ஆனந்தி போற்றி
ஓம் யோக சமாதியினி லமர்ந்தனை போற்றி
ஓம் அண்ட மருளிய அன்னை போற்றி
ஓம் மண்டலமருளிய மங்களை போற்றி
ஓம் சராசர மருளிய சங்கரி போற்றி
ஓம் மாணிக்கப் பதக்க மணிந்தனை போற்றி
ஓம் உனதடி பணிந்தேன் உமையே போற்றி
ஓம் குருவாயும் வந்தருள் குண்டலினி போற்றி
ஓம் தீனதயாபரீ தீர காமாக்ஷீ போற்றி
ஓம் திரிபுர சுந்தரீ சிவ காமாக்ஷீ போற்றி
ஓம் பூரணீ யோகப் புராதனீ போற்றி
ஓம் சாந்த மகேசுவரீ சியாமளை போற்றி
ஓம் சங்கர நாயகீ சாந்தினி போற்றி
ஓம் சோக நிவாரணக் காரணீ போற்றி
ஓம் பஞ்ச தசாக்ஷர வித்யாப் பார்வதீ போற்றி
ஓம் எந்தன் முன் வந்தருள் புரிதாய் போற்றி
ஓம் பிந்து ஒளிக்குள் ஒளிர்சுடர் போற்றி
ஓம் சிந்தை மகிழ அருள்புரி சிவையே போற்றி
ஓம் சித்தர்கள் பணியும் சிவமணியே போற்றி

ஓம் பத்தர்தம் மனத்தமர் பரமேசி போற்றி
ஓம் செம்பவளக் கொடியே! என் செல்வமே போற்றி
ஓம் சங்கடந் தீர்த்தருள் சங்கரீ போற்றி
ஓம் ஆதி பராசக்தி அம்பிகை போற்றி
ஓம் பாசமகற்றிடும் பரம குருவாயினை போற்றி
ஓம் விந்தியாசலத்தமர் வீரேசுவரீ போற்றி
ஓம் பய இருளகற்றிடும் பனிமதி போற்றி
ஓம் மூள் பிறவி தீர்க்கும் மூகாம்பிகை போற்றி
ஓம் கலைகளின் முதலே ஸ்ரீகாமாக்ஷீ போற்றி
ஓம் அன்பர்களுக் கெளியதோர் அன்னை போற்றி
ஓம் இன்ப நிலையருளும் இமையே போற்றி
ஓம் வேதாந்த வீட்டை விளக்கினை போற்றி
ஓம் காமாரி தேடும் காமாக்ஷீ போற்றி
ஓம் உள்ளே உணர அருள்வோய் போற்றி
ஓம் பஞ்சப்ரம்ம ரூபிணீ பார்வதி போற்றி
ஓம் சக்தி பீஜாக்ஷரீ சங்கரீ போற்றி
ஓம் மூகன் புகழ் கடாக்ஷீ காமாக்ஷீ போற்றி
ஓம் பிந்து பீடவாஸிநீ பிராம்மணீ போற்றி
ஓம் சம்பு மாதவன் மகிழ் சாம்பவீ போற்றி
ஓம் அம்பிகை கோமதி அபிராமி போற்றி
ஓம் மதுரஸம்பாக்ஷிணி மங்களை போற்றி
ஓம் மதுகைடப ஸம்ஹார மகேசுவரீ போற்றி
ஓம் வேதத்துத் தியானத் தொளிர்ந்தனை போற்றி
ஓம் செழும் பசும் பொன்னே ! செல்வமே ! போற்றி
ஓம் கற்பக வல்லி ஸ்ரீ காயத்ரீ போற்றி
ஓம் மீனாக்ஷீ காமாக்ஷீ விசாலாக்ஷீ போற்றி
ஓம் மஹிஷாஸுர மர்த்தன மங்கை போற்றி
ஓம் எண்பத்து பீடத் தொளிர் ஏகேசுவரி போற்றி
ஓம் அருள்செய வருதாய் காமாக்ஷீ போற்றி
ஓம் தீர்த்தேசுவரீ தீனதயாபரீ காமாக்ஷீ போற்றி
ஓம் மந்த்ரேசுவரீ மஹேசுவரீ காமாக்ஷீ போற்றி
ஓம் தந்த்ரேசுவரீ தாக்ஷõயணீ காமாக்ஷீ போற்றி
ஓம் யந்த்ரேசுவரீ யதீசுவரி காமாக்ஷி போற்றி
ஓம் சக்த்யேசுவரீ சங்கரீ காமாக்ஷி போற்றி
ஓம் பீடேசுவரீ பீஜாக்ஷரீ காமாக்ஷீ போற்றி
ஓம் தத்வேசுவரீ தர்மேசுவரீ காமாக்ஷி போற்றி
ஓம் ஸப்தேசுவரீ ஸரஸ்வதீ காமாக்ஷி போற்றி
ஓம் ஏகேசுவரீ ஏகாக்ஷரீ காமாக்ஷி போற்றி
ஓம் நாதேசுவரீ நாராயணீ காமாக்ஷி போற்றி

லிங்கோத்பவர் (LINGOTHBAVAR)

அநேகமாக எல்லா சிவாலயங்களிலும் கர்ப்பக் கிருஹத்தின் சுவரில் மேற்குப் பாகத்தில் லிங்கோத்பவ மூர்த்தியின் பிம்பம் இருக்கும். அதில் லிங்கத்துக்குள் ஒரு திவ்ய மூர்த்த...ியிருக்கும். அதன் ஜடா மகுடம் லிங்க வட்டத்துக்குள் முடியாமலே இருக்கும். அதன் பாதமும் லிங்கத்தின் அடியில் முடிகிற வரைக்கும் தெரியாது.
ஸ்ரீ ருத்ராபிஷேகம் பண்ணுவதற்கு முன்பு ஒரு சுலோகம் சொல்லிவிட்டு, அப்புறம்தான் அபிஷேகம் பண்ணுவது வழக்கம். அந்த சுலோகம்:
ஆபாதால நப: ஸ்தலாந்த புவன
ப்ரஹ்மாண்டமா விஸ்புரத்
ஜ்யோதி: ஸ்பாடிக லிங்க மௌலி விலஸத்
பூர்ணேந்து வாந்தாம்ருதை:
அஸ்தோகாப்லுதம் ஏகம் அசம் அநிசம்
ருத்ராநுவாகான் ஜபன்
த்யாயேத் ஈப்ஸித ஸித்தயே(அ) த்ருதபதம்
விப்ரோ மிஷிஞ்சேத் சிவம் ||
இந்த சுலோகத்தில் என்ன தெரியுமா சொல்லியிருக்கிறது? பாதாள முதல் ஆகாச பரியந்தம் எல்லையில்லாத ஜோதி ஸ்வரூபமாகப் பிரகாசிக்கின்ற ஸ்படிக லிங்கத்துக்கு அபிஷேகம் பண்ண வேண்டும் என்று சொல்லியிருக்கிறது.
ஸ்படிக லிங்கத்துக்கு ஒரு வர்ணமும் சொல்ல முடியாது. எந்த வஸ்துவை அதில் வைக்கிறோமோ அதனுடைய வர்ணத்தை அது பிரதிபலிக்கும். குண -தோஷம் இல்லாதது அது. ஞானம் எப்படிப் பரிசுத்தமாக இருக்கிறதோ, அப்படி அந்த ஸ்படிக லிங்கம் இருக்கிறது. பரப்பிரம்ம ஸ்வரூபம் நிர்விகாரமாக இருந்தாலும், நம்முடைய மனோபாவத்தை எப்படி வைக்கிறோமோ அப்படித் தோன்றும் என்பதற்குத் திருஷ்டாந்தமாக, இந்த ஸ்படிக லிங்கம் இருக்கிறது. அது எதையும் மறைக்காது. அதற்குப் பின்னால் உள்ள வஸ்துக்களையும் அதன் வழியாகப் பார்க்கலாம். பரம சுத்தமாக நிஷ்களங்கமாக இருக்கும். நிர்குணமான பரமாத்ம வஸ்துவுக்கு அது திருஷ்டாந்தம். நினைக்கிற ரூபமாக அது தெரியும்.
மேலே சொன்ன சுலோகப்படி, அதன் சிரஸில் பூரண சந்திரன் இருக்கிறது. ‘பூர்ணேந்து’ என்று சுலோகத்தில் வருவது, ‘பூர்ண இந்து!’; இந்து என்றாலும் சந்திரன் என்றாலும் ஒன்றுதான். ஈசுவரன் ஜடையும், கங்கையும், கண், காது, மூக்கு, கை, கால் முதலிய அவயவங்களும் கொண்ட ‘ஸகள’ ரூபத்தில் வருகிறபோது, அவர் மூன்றாம் பிறையை வைத்துக் கொண்டு சந்திரமௌலியாக இருக்கிறார். ரூபமே இல்லாத பரமாத்மா ‘நிஷ்கள’ தத்வமாயிருக்கிறபோது, அங்கே சந்திரன், கங்கை எதுவும் இல்லை. அரூபமாயும் இல்லாமல், ஸ்வரூபமாயும் அவயவங்களோடு இல்லாமல், லிங்கமாக ஸகள – நிஷ்களமாக இருக்கிறபோது அவர் பூர்ண சந்திரனை உச்சியில் வைத்திருக்கிறார். அதிலிருந்து அமிருதமே கங்கை மாதிரிக் கொட்டுகிறது.
ஸமஸ்த பிரபஞ்ச ஸ்வரூபமான ஜ்யோதிர்லிங்கம் குளிர்ந்தால், லோகமெல்லாம் குளிரும். இதனால்தான் சிவலிங்கத்துக்கு ஓயாமல் அபிஷேகம் செய்வது. ருத்திர அபிஷேகத்துக்கு முன்பு சொல்லும் சுலோகம், இதை எல்லாம் அறிவுறுத்துகிறது.
ஸகல பிரம்மாண்டமும் சிவலிங்கம்தான்.
ஸ்ரீ ருத்ரத்தில் இப்படியே சொல்லப்பட்டிருக்கிறது. ஸர்வ பதார்த்தங்களும், நல்லது கெட்டது எல்லாம் சிவ ஸ்வரூபம் என்று ஸ்ரீ ருத்ரம் சொல்லுகிறது.
லிங்கம் ஏன் வட்ட வடிவமாயிருக்கிறது? வட்டமான ஸ்வரூபத்துக்குத்தான் அடி முடியில்லை; ஆதியில்லை, அந்தமுமில்லை. மற்றவற்றுக்கு உண்டு. முக்கோணத்துக்கு, சதுரத்துக்கு உண்டு. ஆதியந்தம் இல்லாத வஸ்து சிவம் என்பதை லிங்கா காரம் காட்டுகிறது.
சரியான வட்டமாக (Circle) இல்லாமல், லிங்கம் நீள் வட்டமாக (ellipse) இருக்கிறது. பிரபஞ்சமே ‘எல்லிப்டிக்’காகத்தான் இருக்கிறது. நம் சூரிய மண்ட லத்தை (solar system) எடுத்துக்கொண்டாலும் கிரஹங்களின் அயனம் நீள்வட்டமாகத்தான் இருக்கிறது” என்று நவீன விஞ்ஞானத்தில் சொல்வதும், பிரம்மாண்டமும் ‘ஆவிஸ்புரத்’ என்று சாஸ்திரம் சொல்வதும் லிங்க ரூபத்துக்கு ரொம்ப ஒற்றுமையாக இருக்கிறது.
யாராவது பந்துவை நினைக்கிறோம். சந்தோஷமாயிருக்கிறது; ஆனால், அவருடைய உருவத்தையும் பார்த்தால்தான் சந்தோஷம் பூரணமாகிறது. அவ்வாறே உருவமற்ற சிவமும் ஒரு உருவத்தோடு வந்து அனுக்கிரகம் பண்ணினால்தான் ரொம்ப சந்தோஷமாக இருக்கும். ஞானிகளுக்கு மட்டுமே பரமாத்ம ஸ்வரூபத்தின் நிராகார (அருவ) உண்மை புரியும். உருவத்தைப் பார்த்துப் பார்த்து ஆனந்தம் அனுபவிக்கிற நமக்கு உருவத்தோடு கண்டால்தான் ஆனந்தம் உண்டாகும். அதற்காகத்தான் உருவமற்ற பரமேசுவரன், அருவுருவான லிங்கமானதோடு நில்லாமல், அந்த லிங்கத்துக்குள்ளேயே திவ்வியரூபம் காட்டும் லிங்கோத்பவ மூர்த்தியாக இருக்கிறார்.
இப்படி ரூபத்தைக் காட்டினாலும் வாஸ்தவத்தில் தமக்கு அடியும் இல்லை, முடியும் இல்லை. அதாவது, ‘ஆதியும், அந்தமும் அற்ற ஆனந்த வஸ்துவே தாம்’ என்று உணர்த்துவதற்காக, மேலே லிங்க வட்டத்துக்குள் ஜடாமுடி முடியாமலும், கீழே அதே மாதிரி தம் பாதம் அதற்குள் அடங்காமலும் இருப்பதாகக் காட்டுகிறார்.
அடி முடி எல்லை இல்லாமல், அவர் ஜ்யோதி ஸ்வரூபமாக நின்றார். ஜ்யோதிர்லிங்கமாக, ஆகாயத்துக்கும் பூமிக்குமாகப் பரமசிவன் உத்பவித்த இரவே சிவராத்திரியாகும்.
பிரம்மா ஹம்ஸரூபமாகப் போய்ப் பார்த்தும் சிவபெருமானின் சிரஸ் அகப்படவில்லை என்றும், விஷ்ணு வராஹ ரூபமாகப் போயும் பாதம் அகப்படவில்லை என்றும் சொல்வதன் தாத்பரியம் என்னவென்றால், பரமாத்மா ஆதி அந்த ஹீனமான வஸ்து என்பதுதான்; சிருஷ்டி, பரிபாலனம் எல்லாவற்றையும் கடந்த வஸ்து அது என்பதுதான். இப்படி அடி முடி தேடி பிரம்மாவும் விஷ்ணுவும் பெற முடியாத வரையே, ‘என் சாமர்த்தியத்தால் அறிய முடியும்’ என்கிற அகங்காரமில்லாமல் அன்போடு பக்தி செய்து உருகினால், வெகு சுலபத்தில் அவர் நமக்கு அகப்பட்டு விடுவார். அன்பினாலே மிகமிக விரைவில் திருப்தி பெற்று அனுக்கிரகிப்பவர் சிவபெருமான் என்பதாலேயே, அவருக்கு ‘ஆசுதோஷி’ என்று ஒரு பெயர் இருக்கிறது.
சகல பிரபஞ்சமும் அடங்கியிருக்கிற லிங்க ரூபமானது ஆவிர்பவித்த சிவராத்திரி மகா சதுர்த்தசி இரவில், அவரை அப்படியே ஸ்மரித்து ஸ்மரித்து அவருக்குள் நாம் அடங்கியிருக்க வேண்டும். அதைவிட ஆனந்தம் வேறில்லை.

Saturday, 20 December 2014

Sri Anjaneya





மார்கழி மாதம் அமாவாசை மூலம் நட்சத்திரத்தில் அவதரித்தவர் அனுமன். இவரது பெருமை ராமாயணத்தில் மட்டுமில்லை, பல புராணங்களிலும் உண்டு. இதற்கு முக்கிய காரணம் வைணவத்தில் ராம பக்தனாகவும், சைவத்தில் சிவனின் அம்சமாகவும் இருப்பது தான்.எந்த இன்னலையும் எதிர்நோக்கும் அறிவையும், பலத்தையும், தைரியத்தையும், கொடுக்கிறவர் என்ற நம்பிக்கை நம் மக்களிடையே உண்டு. ஹயக்கிரீவர், சரஸ்வதி, தட்சிணாமூர்த்தி போன்று ஆஞ்சநேயரை வழிபட்டால் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம்.

‘ராமா என சொல்லுகின்ற இடத்தில் எல்லாம் ஆஞ்சநேயர் இருப்பது நிச்சயம்.

இவரது வழிபாட்டில் ராமநாம பஜனையும், செந்தூரப்பூச்சும், வெற்றிலை மாலையும் நிச்சயம் இடம் பெறும். இவரது சன்னதியிலும் துளசியே பிரதான பிரசாதம். பாரதப்புண்ணிய பூமியில் தொண்டரையே தெய்வமாக போற்றப்படும், மேன்மையை ஆஞ்சநேயர் வரலாற்றில் காணலாம். . அனுமன் அவதார நாளில் அருகில் உள்ள ஆஞ்சநேயர் தலத்திற்கு சென்று:
-------------------------------------------------
‘ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே
ராமதூதாய தீமஹி
தன்னோ அனுமன் பிரசோதயாத்
--------------------------------------------------
என்ற அனுமன் காயத்ரி சொல்லி அவரது அருள்பெறுவோம். அத்துடன் அனுமன் ஜெயந்தியன்று அவரது புகழ்பரப்பும் ‘அனுமன் சாலீஸா பாராயணம் செய்தால் நினைத்த காரியம் நடக்கும் என்பது நம்பிக்கை. அனுமன் ராமனுக்கு தூதனாக இருந்தாலும், இவர் சிவனின் அம்சமாக தோன்றியவ
ர்.

Wednesday, 3 December 2014

SECRETS OF THIRUVANAMALAI TEMPLE

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் ! ! !
திருவண்ணாமலைத் தலம் நடுநாட்டுத் தலங்களுள் முதன்மையானது. பஞ்சபூதத் தலங்களுள் இது அக்னித் தலம். நால்வராலும் பாடப்பட்ட தலம். எங்கிருந்து நினைத்தாலும் முக்தி கொடுக்கும் தலம் இதுதான். இத்தலத்தில்தான் திருப்புகழ், கந்தர் அனுபூதி, திருவெம்பாவை, திருவம்மானை, அருணாச்சல அஷ்டகம் போன்ற புனித நூல்கள் பிறந்தன.
மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூவகை சிறப்புகள் கொண்ட தலம் இது. பிரம்மன், திருமாலின் ஆணவம் அழிந்த தலம். அர்த்தநாரீஸ்வரர் கோலம் கொண்ட தலம். கார்த்திகை தீபத்தின் மூலத் தலம். ஆதாரத் தலங்களுள் இது மணிப்பூரகத் தலம். இத்தல மலையுச்சியில் ஏற்றப்படும் மகா தீபத்தால், இது உலகப் புகழ்பெற்ற தலம்.
நகரின் மையத்தில், மலையடிவாரத்தில் !
அண்ணாமலையார் ஆலயம் 24 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்துள்ளது. ஆலயத்தில் ஒன்பது கோபுரங்கள் உள்ளன. கோபுரங்கள் மலிந்த ஆலயம் இது. இவ்வாலயத்தின் உள்ளே ஆறு பிராகாரங்கள் உள்ளன. 142 சந்நிதிகள், 22 பிள்ளையார்கள், 306 மண்டபங்கள், 1,000 தூண்கள் கொண்ட ஆயிரங்கால் மண்டபம், அதனடியில் பாதாள லிங்கம் (பால ரமணர் தவம் செய்த இடம்), 43 செப்புச் சிலைகள், கல்யாண மண்டபம், அண்ணாமலையார் பாத மண்டபம் என அமைந்த ஆலயம்.
ஆலயத்தின் உள்ளேயே சிவகங்கைத் தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் என்ற இரு பெரிய குளங்கள் உள்ளன. கொடிக்கம்பம் அருகே செந்தூர விநாயகர் பிரம்மாண்டமாக காட்சி தருகிறார். பஞ்ச லிங்கங்களும், நான்கு முகங்கள் கொண்ட பிரம்ம லிங்கமும் உள்ளன. காலபைரவர் சந்நிதியும் உண்டு.
மூன்று இளையனார்!
இங்கே முருகப்பெருமான் இளையனார் என்னும் பெயரில் மூன்று இடங்களில் வணங்கப் பெறுகிறார்.
அருணகிரியுடன் சவால் விட்டான் சம்பந் தாண்டான். அதற்காக முருகன் அருணகிரிக்கு கம்பத்தில் காட்சி தந்தார். இவர்தான் கம்பத்திளையனார் என்ற பெயரில் வளைகாப்பு மண்டபத் தூணில் காட்சி தருகிறார்.
அருணகிரி வல்லாள கோபுரத்தின் மீதேறி கீழே குதித்து உயிர்விட முயன்றபோது, தடுத்தாட்கொண்டு அருள்புரிந்து திருப்புகழ் பாட வைத்தவர் கோபுரத்திளையனார்.
கோபுரம் அருகிலேயே சந்நிதி. பிச்சை இளையனார் சந்நிதி, கிளிகோபுரம் அருகே யுள்ளது.
காமதகனம் நடக்கும் சிவாலயம் இது ஒன்றுதான். ஆடிப்பூரத்தன்று மாலை, ஆலயத்தின் உள்ளேயே உண்ணாமுலையம்மன் சந்நிதிமுன் தீமிதி விழா நடத்தும் ஆலயமும் இது ஒன்றுதான். திருவிழா நாட்களில் திட்டிவாசல் வழியே உற்சவமூர்த்திகள் வெளிவருவதும் இவ்வாலயத்தில் மட்டும்தான். அருணகிரிக்கு விழா எடுக்கும் ஆலயமும் இதுதான்.
ஒன்பது கோபுரங்கள்!
கிழக்கே ராஜகோபுரம் (217 அடி உயரம்), வீரவல்லாள கோபுரம், கிளி கோபுரம் (81 அடி உயரம்); தெற்கே திருமஞ்சன கோபுரம் (157 அடி உயரம்), தெற்கு கட்டை கோபுரம் (70 அடி உயரம்); மேற்கே பேய் கோபுரம் (160 அடி உயரம்), மேற்கு கட்டை கோபுரம் (70 அடி உயரம்); வடக்கே அம்மணி அம்மன் கோபுரம் (171 அடி உயரம்), வடக்கு கட்டை கோபுரம் (45 அடி உயரம்).
சிவபெருமானே அண்ணாமலையாகக் காட்சி தருகிறார். இதை காந்த மலை என்பர். காரணம், இம்மலையை தரிசிக்க வருவோரை மீண்டும் மீண்டும் காந்தம்போல கவர்ந்து இங்கு வரவழைக்கும்.
கிருத யுகத்தில் இது அக்னி மலையாகவும், திரேதா யுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் தாமிர மலையாகவும், இக்கலியுகத்தில் கல் மலையாகவும் திகழ்கிறது.
மலையின் உயரம் 2,688 அடி. (800 மீட்டர்). கிரிவலப் பாதையின் தூரம் 14 கிலோமீட்டர். இப்பாதையில் 20 ஆசிரமங்களும், 360 தீர்த்தங் களும், பல சந்நிதிகளும், அஷ்ட லிங்கங்களும் உள்ளன. 26 சித்தர்கள் வாழ்ந்துள்ளனர். அடிக்கு 1,008 லிங்கம் அமைந்துள்ளது என்பர். மலையை ஒவ்வொரு இடத்தில் நின்று பார்த்தால் ஒவ்வொரு வகை தரிசனமாக 27 வகை தரிசனம் காணலாம்.
உமைக்கு இடபாகம் கொடுத்த ஈசன்!
திருக்கயிலாயத்தில் ஆழ்நிலை தியானத்தில் இருந்த சிவபெருமானின் கண்களை அன்னை பராசக்தி விளையாட்டாக மூடியதால் இப்பிரபஞ்சமே இருண்டது. அனைத்து ஜீவராசிகளும் துன்பத்திற்கு ஆளாகி தவித்தன. இதனால் ஏற்பட்ட பாவத்தை போக்க பூவுலகில் காஞ்சிபுரம் கம்பை நதிக்கரையில் அன்னை காமாட்சியாக தவம் இருந்தாள். ஒருநாள் கம்பை நதி வெள்ளத்தில் தான் அமைத்த சிவலிங்கம் கரையாமல் இருக்க மார்போடு சேர்த்து அணைத்தார் அன்னை காமாட்சி. இதனால் அன்னையின் பாவத்தை சிவபெருமான் நீக்கினார். அய்யனே நீங்கள் எப்போதும் என்னை பிரியாதிருக்க தங்கள் திருமேனியில் எனக்கு இடபாகம் தந்தருள வேண்டும் என சக்தி வேண்டினார். அதற்கு சிவபெருமான், அண்ணாலை சென்று தவம் செய் என உத்தரவிட்டார்.
அவ்வாறே உமையும் தவம் செய்தாள். கார்த்திகை மாதத்தில் பவுர்ணமியும், கிருத்திகையும் சேரும் நாளில் மலையின்மீது பிரகாசமான ஒளி ஒன்று உண்டானது. அப்போதுமலையை இடதுபுறமாக சுற்றிவாஎன அசரீரி ஒலித்தது. அதன்படி கிரிவலம் சென்ற அன்னையை அழைத்து தனது மேனியில் இடபாகத்தை அளித்து ஆட்கொண்ட சிவபெருமான் அர்த்தநாரீஸ்வரராக காட்சியளித்தார். இதையும் நினைவுகூர்ந்தே அண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.
மலையளவு பயன்!
நரசிம்மர் இரணிய வதம் செய்தபோது, அருகிலிருந்த சிறுபாலகனான பிரகலாதனை நரசிம்மரின் உக்கிரம் தாக்கவில்லை. காரணம் இரணியன் மனைவி கர்ப்பமாக இருந்தபோது நாரதர் யோசனைப்படி கிரிவலம் வந்தாள். அப்போது பெய்த அமுத மழைத் துளி மலைமீதுபட்டு அவள் வயிற்றில் பட்டது. அது குழந்தைக்கு தக்கபலம் கொடுத்ததால்தான் இரணியன் மகன் பிரகலாதனுக்கு சக்தி கிடைத்தது.
கிரிவலம் செல்ல நினைத்து ஓர் அடி எடுத்து வைத்தால் முதல் அடிக்கு ஒரு யாகம் செய்த பலன் கிடைக்கும். இரண்டாம் அடிக்கு ராஜசூய யாகம் செய்த பலனும், மூன்றாம் அடிக்கு அனைத்து யாகங்களையும் செய்த பலனும் கிட்டும். திருவண்ணாமலை என உச்சரித்தாலே ஐந்தெழுத்தை மூன்று கோடி முறை உச்சரித்த பலன் கிட்டும். மகாதீப தரிசனம் கண்டால், அவர்களின் 21 தலை முறையினருக்கும் புண்ணியம் கிட்டும்.
கிரிவலப் பாதையிலுள்ள இடுக்குப் பிள்ளையார் சந்நிதிக்கு மூன்று வாயில்கள்- நேர்க்கோட்டில் இருக்காது. இதன்வழியே படுத்துநெளிந்து, வளைந்துதான் வெளிவர வேண்டும். இதனால் குழந்தைப்பேறு கிட்டும்; கருப்பைக் கோளாறுகள் நீங்கும்.
மலையின் கிழக்கே இந்திரலிங்கம், தென் கிழக்கே அக்னிலிங்கம், தெற்கே எமலிங்கம், தென்மேற்கே நிருதிலிங்கம், மேற்கே வருணலிங்கம், வடமேற்கே வாயுலிங்கம், வடக்கே குபேரலிங்கம், வடகிழக்கே ஈசான்ய லிங்கம் அமைந்துள்ளன. இந்த எட்டு லிங்க தரிசனம் முடிக்கவும் கிரிவலமும் முடிந்துவிடும்.
பாவம் போக்கும் அண்ணாமலை திருப்பாதம்!
கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பது ஆன்றோர் வாக்கு. அதைப்போன்றே இறைவனின் திருப்பாத தரிசனம் நமது முற்பிறவி பாவங்களை எல்லாம் தீர்க்கும் என்பது ஐதீகம். திருஅண்ணாமலையார் கோயிலில் அண்ணாமலையார் பாதம் அமைந்துள்ளது. கோயிலுக்கு உள்ளே பே கோபுரத்துக்கு வலது புறத்தில் அண்ணாமலையார் பாதம் உள்ளது. அடி முடி காணாத பரம் பொருளின் பாத தரிசனம் காண வேண்டி அடியார்களும், அருளாளர்களும் மேற்கொண்ட கடும் தவத்தின் பயனாக விஸ்வரூப மூர்த்தியாக அண்ணாமலையார் எழுந்தருளிய இடத்தில் அமைந்துள்ளதே திருப்பாதம். அண்ணாமலையார் பாதம் தனி சன்னதியாக அமைந்துள்ளது. கோயிலில் தரிசனம் செய்யும் பக்தர்கள் தவறாமல் பாத தரிசனம் செய்வது நன்மை தரும்.
பாத தரிசன சன்னதியில் தினமும் மலர் அலங்காரத்துடன் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது. பாதத்தை சுற்றியுள்ள தூண்களில் விநாயகர், முருகர், கோதண்டராமர், சக்திதேவியின் திருவடிவங்கள் காட்சி தருகின்றன. மேலும் மலை உச்சியிலும் அண்ணாமலையாரின் திருப்பாதம் அமைந்திருக்கிறது. தீபம் ஏற்றப்படும் மலை உச்சியின் வலது புறத்தில் பாத தரிசனத்தை நாம் காணலாம். திருவண்ணாமலையை தரிசித்து தவமிருந்து பேறு பெற்ற சித்தர்கள், மகான்கள், அருளாளர்கள் ஏராளம்.
அவர்களில் இடைக்காட்டு சித்தர், அருணகிரிநாதர், ஈசான்ய ஞானதேசிகர், குரு நமச்சிவாயர், குகை நமச்சிவாயர், ரமணமகரிஷி, தெய்வசிகாமணி தேசிகர், விருப்பாட்சிமுனிவர், சேஷாத்ரி சுவாமிகள், இசக்கிசாமியார், விசிறி சாமியார், அம்மணியம்மன், கணபதி சாஸ்திரி, சடைசாமிகள், தண்டபாணி சுவாமி, கண்ணாடி சாமியார், சடைச்சி அம்மாள், பத்ராசல சுவாமி, சைவ எல்லப்பநாவலர், பாணி பத்தர் உள்ளிட்டவர்கள் முக்கியமானவர்கள்.
கார்த்திகை ஜோதி மகத்துவம்!
அண்ணாமலையார் தீபம் என்பது திருவிளக்கின் விஸ்வரூபம். தீபம் என்பது லட்சுமி தேவியின் வடிவத்தையும் (சுடர்), சரஸ்வதி தேவியின் பிம்பத்தையும் (ஒளி), பார்வதியின் சக்தியையும் (வெப்பம்) ஒன்றாக சேர்த்தது. திருவிளக்கு தீபச்சுடரில் மூன்று தேவிகளின் வடிவத்தை காணும் அனைவரும் நற்கதி அடைவர் என்பது ஆன்றோர் மொழி. எனவேதான் தீபம் என்றாலே விசேஷமாக கருதப்படுகிறது. கார்த்திகை தீபத்தன்று தீபமேற்றி வழிபட்டால், சிவனின் அருளுடன், மூன்று தேவியரின் அருளும் சேர்ந்து கிடைக்கும். தீப ஒளி தீய சிந்தனைகள் ஏற்படாத வண்ணம் தடுக்கிறது. இதன் அடிப்பாகத்தில் பிரம்மா, தண்டு பாகத்தில் மகாவிஷ்ணு, நெய், எண்ணெய் நிறையுமிடத்தில் சிவபெருமான் வாசம் செய்கின்றனர்.
வேத புராணங்களும்கூட விளக்கேற்றுவதால் மிகச் சிறந்த பலன் கிடைக்கும் என்கின்றன. எத்தனை எத்தனையோ அரசர்கள், கோயில்களில் தீபம் ஏற்றுவதையே மிகச் சிறந்த திருப்பணியாகச் செய்துள்ளனர். எல்லா நாளுமே தீபம் ஏற்றி வழிபட உயர்வான பலன் தரும் என்றாலும், கார்த்திகை மாதத்தில் ஆலயங்களில் தீபம் ஏற்றி வைப்பதும், இல்லத்தில் இருவேளைகளும் விளக்கேற்றுவதும் எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வை ஒளிமயமாக்கும்.
தீபஜோதி வழிபாடானது இருள் போன்று நம்மை சூழ்ந்து நிற்கிற தடைகள், இடையூறுகளையும் ஏழரை சனி, அஷ்டமச்சனி போன்றவற்றால் ஏற்படக் கூடிய கெடுபலன்களையும் போக்கி ஒளிமயமான, வளமான வாழ்வை அருளும் என்பது நம்பிக்கை. சிவபெருமானே மலையாகி நிற்கும் அண்ணாமலையின் உச்சியில் மகாதீப வடிவில் காட்சி தரும் சிவபெருமானை வணங்கி வளமான வாழ்வு பெறுவோம்.
தீபத் திருவிழா!
உலகப் புகழ்பெற்ற தீபத்திருவிழா 12 நாட்களுக்கு திருவண்ணாமலையில் நடைபெறும். தினமும் காலையும், மாலையும் பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்துடன் பலவகை வாகனங்களில் பவனி வருவார்கள். ஐந்தாம் நாள் வெள்ளி ரத உற்சவமும், ஏழாம் நாள் ரத உற்சவமும் சிறப்பாக நடைபெறும். பஞ்சமூர்த்திகளும் தனித்தனி தேர்களில் உலா வருவார்கள். சுவாமி தேர் பெரியது. அடுத்தது அம்மன் தேர். இதை பெண்களே வடம் பிடித்து இழுப்பார்கள்.
பரணி தீபம்!
பத்தாம் நாள் அதிகாலை 4.00 மணிக்கு, மூலவர் கருவறைமுன் மிகப்பெரிய கற்பூரக் கட்டியில் ஜோதி ஒளி ஏற்றி, தீபாராதனை காட்டி, அதில் ஒற்றை தீபம் ஏற்றுவார்கள். இந்த ஒற்றை நெய்தீபத்தால் நந்திமுன் ஐந்து பெரிய அகல் விளக்கு ஏற்றுவார்கள். அதன்பின் உண்ணாமுலை அம்மன் சந்நிதியிலும் ஐந்து பெரிய அகல் விளக்கில் தீபம் ஏற்றுவார்கள். இந்த பரணிதீபம் காலையில் நடக்கும்.
மகாதீபம்!
மாலை 6.00 மணிக்கு இந்த பத்து தீபங்களும் மேள தாளத்துடன் வெளியே எடுத்துவந்து கொடிக் கம்பம் அருகேயுள்ள தீபக் கொப்பரையில் ஒன்றுசேர்த்து எரிய விடுவார்கள். அந்த நிமிடத்தில் அர்த்தநாரீஸ்வரர் வெளிவந்து காட்சி கொடுத்துவிட்டு உடனே உள்ளே சென்றுவிடுவார். இது இரண்டு நிமிட தரிசனம்தான். அப்போதே வாசல் வழியே பெரிய தீவட்டியை (ஜலால ஒளியை) ஆட்டி மலைக்கு அடையாளம் காட்டுவார்கள். இதற்காகவே காத்திருந்தோர் மலைமீது உடனே மகாதீபம் ஏற்றிவிடுவர். மக்கள் கோஷமாக "அண்ணாமலைக்கு அரோஹரா' எனக்கூறி தரிசனம் கண்டபின், இல்லம் சென்று வீடு முழுவதும் தீபமேற்றி மாவிளக்கேற்றி பூஜை செய்துவிட்டு விரதம் முடிப்பார்கள்.

ஏழடி உயரமுள்ள செப்புக் கொப்பரையில் தான் மகாதீபம் ஏற்றப்படுகிறது. 3,000 கிலோ பசுநெய், 1,000 மீட்டர் காடாதுணி திரி, 2 கிலோ கற்பூரம் இட்டு தீபம் ஏற்றுவார்கள்.
தீபம் ஏற்றும் உரிமையுடையோர் மீனவ இன பரத்வாஜ குலத்தவர்கள்தான். இவர்களின் பரம்பரையினர்தான் இப்போதும் தீபம் ஏற்றுகிறார்கள். தீப விழாவன்று இவர்கள் ஆலயத்தில் கூடுவார்கள். ஆலயத்தார் இவர்களை கௌரவித்தபின் தீபம் ஏற்றும் பொருட்களைக் கொடுத்தனுப்புவார்கள். மூன்று மணி நேரத்தில் மலை உச்சியையடைந்து விடுவார்கள். ஜலால தீப அடையாளம் கண்டபின் தீபம் ஏற்றி விடுவார்கள். இத்தீபம் 11 நாட்கள் எரியும். இரவில் பத்து கிலோமீட்டர் தூரம் வரை தெரியும்.
திருப்புகழ் மண்டபம் ஆலயத்தில் அமைந் துள்ளது. இங்குதான் சமயச் சொற்பொழிவுகள் நடைபெறும். இவ்வாலயம் முழுவதும் சுற்றிப் பார்க்க மூன்று மணி நேரம் ஆகும்.
லட்சக்கணக்கான பக்தர்களைத் தன்பால் ஈர்க்கும் அண்ணாமலையை தரிசிப்போம்! பிறவிப் பிணி நீங்கி நல்வாழ்வு பெறுவோம்!

தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி